சாணார்பட்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல், பிப். 20: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து, நத்தம், சாணார்பட்டி வட்டாரங்களில் உள்ள படித்த ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப். 21, வெள்ளி) நடைபெறவுள்ளது. சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கவுள்ள இம்முகாமில் 18 வயது நிறைவு பெற்ற ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயவிபரக்குறிப்பு புகைப்படம் ஆகிய ஆவணங்களின் அசல்- நகலுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: