×

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

நாமக்கல், பிப்.20: நாமக்கல்லில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்ட அரசு அலுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர் ஓட்டம், கபாடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. கால்பந்துப் போட்டியில் ஆண்கள் பங்கேற்றனர். போட்டிகள் அனைத்தும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள  விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இன்று (20ம் தேதி) காலை 8.30 மணிக்கு, இருபாலருக்குமான இறகுப்பந்து போட்டி மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியிலும்,  டென்னிஸ் நாமக்கல் ஆபிசர்ஸ் கிளப்பிலும், டேபிள் டென்னிஸ் போட்டி விக்டோரியா ஹாலிலும் நடைபெறுகிறது. போட்டிகளில், காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிபுரியும் பணியாளர்கள், அரசு பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

Tags : Sports competitions ,servants ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து