×

பெண் விவகாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்

கெங்கவல்லி, பிப்.20:  கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே பெண் விவகாரத்தில் நீண்டகாலமாக பிரச்னை நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளியில் மாணவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த விஷயம் மாணவர்கள் உறவினருக்கு தெரிய வரவே, ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்து, தலைமையாசிரியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இருதரப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : government school ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...