×

தேவாலயங்கள் பழுது பார்க்க நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிக்கை: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம்  பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்த நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.   சான்றிதழ் (பிற்சேர்க்கை -III)  அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

 விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதை படியிறக்கம்  செய்து விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்ப படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை II மற்றும் IIIல் உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையிலான குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவாலயங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்டமதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவிவேண்டி கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.  நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு  பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.   இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Churches ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்