×

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், பிப். 20: திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த அம்மன் வீதியை சேர்ந்தவர் பூவழகி (61). பூவழகியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருடைய மகள் நித்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் கணவரை பிரிந்து தாய் பூவழகியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நித்யா கடந்த சில நாட்களாக நோயால் அவதிபட்டு வந்துள்ளார். அவருடைய மருத்துவ செலவிற்காக பூவழகி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனை அடைக்க முடியாமல் பூவழகி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
 நேற்று வீட்டில் தனியாக இருந்த பூவழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை