×

ரூ.11.95 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில், பிப்.20: வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.11.95 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் 45 பேர், 306 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் முத்தூர், வெள்ளக்கோவில் பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் ஏழு பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில், முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ 100.05க்கும், இரண்டாம் தரம் கிலோ ரூ.51.35க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 95 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடந்தது.


Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்