×

தேவாலா பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்

பந்தலூர்,  பிப்.20: நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா காவல் நிலையத்திற்கு  செல்லும் சாலையில் இருந்து சர்ச் பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியை  சுற்றிலும்  ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கூடிய பொதுமக்களின்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த சாலைகளில் உள்ள  கழிவுநீர் கால்வாய்களில் அதிகளவில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு  நோய் பரவும் அபாயம் உள்ளது.  இதனால் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி  தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற கோரி பலமுறை சம்மந்தப்பட்ட நெல்லியாளம்  நகராட்சி நிர்வாகத்திடம் முறையீட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என  இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்  கருதி இந்த பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : Dewala ,
× RELATED பந்தலூர் அருகே தார்கலவை ஆலை மறு...