மாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்

ஈரோடு, பிப்.20:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் 21ம் தேதி (நாளை) வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்கள் நடைபெற உள்ளது.அதன்படி, ஈரோடு தாலுகாவில் நல்லிக்கவுண்டன்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் அவல்பூந்துறை விஏஓ அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் தாமரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திலும் நடைபெற உள்ளது.பெருந்துறை தாலுகாவில் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பவானி தாலுகாவில் கேசரிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், அந்தியூர் தாலுகாவில் அம்மாபேட்டை சமுதாய கூடத்திலும், கோபி தாலுகாவில் சந்திராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடைபெற உள்ளது.சத்தியமங்கலம் தாலுகாவில் பூசாரிபாளையம் விஏஓ அலுவலகத்திலும், நம்பியூர் தாலுகாவில் மலையம்பாளையம் அங்கன்வாடி மையத்திலும், தாளவாடி தாலுகாவில் தமிழ்புரம் பால் சொசைட்டி வளாகத்திலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெற கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: