×

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப்.20: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் மின் ஊழியர் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் கள உதவியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் பணிநியமனம் செய்யப்படாத ஐடிஐ படித்த 2 ஆயிரத்து 900 பேரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும். பணி நியமன தடை சட்டத்திற்கான அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Staff Demonstration ,
× RELATED சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்