×

வேதாரண்யத்தில் தெருவில் சுற்றிதிரிந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு முடிதிருத்தி புத்தாடை வழங்கல்

வேதாரண்யம், பிப்.20: வேதாரண்யத்தில் நகராட்சி துப்புரவு பணியாளயர்கள் தெருவில் சுற்றிதிரிந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு முடி திருத்தி புத்தாடை வழங்கினர்.வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்த மன நோயாளிகளுக்கு பல்வேறு அமைப்பினர் உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் நகரில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளுக்கு வேதாரண்யம் நகராட்சி ஆணையர் (பொ) பிரதான்பாபு, மேலாளர் மன்சூர் மற்றும் பணியாளர்கள் மற்றும் சேவை அமைப்பினர் மற்றும் ஈகா அறக்கட்டளை மற்றும் மணிமாறன், ரவி, ரமேஷ் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இணைந்து மனநிலைபாதித்தவர்களுக்கு முடிதிருத்தி (மொட்டையடித்து) குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து உணவும் வழங்கினர். இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் சொந்த செலவில் இப்பணியை மேற்கொண்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Tags : Barber New Year ,
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது