கீழ்வேளூர், பிப்.20: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மகளிருக்கான மூலிகை பயிற்சி முகாம் நடைபெற்றது.முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மரபு வழி சித்த மருத்துவ பேராய பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா நிர்வாகி ஜெயசீலன் வரவேற்றார். மகளிருக்கான மூலிகை பயிற்சி முகாமை ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கமோகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செல்வேந்திரன், நேரு யுவகேந்திராவை சேர்ந்த ஜெயப்பிரியா, கவுசல்யா, மனோன்மணி, செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.