×

ஞாயிறுதோறும் படியுங்கள் வேதாரண்யம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து விவசாய தொழிலாளி பலி

வேதாரண்யம், பிப்.20: வேதாரண்யம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து விவசாய தொழிலாளி பலியானார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தொண்டியக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் ராஜிவ்காந்தி (36). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜிவ்காந்தி விவசாய கூலிவேலை செய்து வந்தார். இவர் நேற்று தகட்டூர் அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார்.இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜிவ்காந்தி இறந்தார். இதுகுறித்து ராஜிவ்காந்தியின் மனைவி பூமதி கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : farm worker ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்