பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்

புதுச்சேரி, பிப். 18: பாண்லே ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி குருமாம்பேட் தொழிற்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தீப்பாய்ந்தான் எம்எல்ஏ அங்கு சென்றார். அவரை சில ஊழியர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்தனர். சிலர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை திட்டினார்கள்.

இதனால் தீப்பாய்ந்தான் எம்எல்ஏ, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு போலீசில் புகார் கொடுத்தார்.அதில், ஜாதி ரீதியாக தன்னை அவமதித்து திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினார். அதன்படி பாண்லே ஊழியர் துரைமுருகன், ராஜசேகரன், மகேஷ், சுப்புராயலு, சரவணகுமார், சிவ சுப்பிரமணியன் வெங்கடேசன் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: