புதுச்சேரி, பிப். 19: பண்ருட்டி காதலியை ஏமாற்றி மோசடி செய்த புதுச்சேரி வாலிபரை பிடிக்க தனிப்படை சென்னையில் முகாமிட்டுள்ளது.
புதுச்சேரி கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (28). தனியார் கம்பெனி ஊழியரான இவர் 4 வருடங்களாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, லாஸ்பேட்டையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அப்பெண்ணை தங்க வைத்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது.இதையடுத்து சமீபத்தில் தன்னை திருமணம் செய்யுமாறு அவரிடம் காதலி கேட்டபோது, பாலாஜி மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.