புதுச்சேரி, பிப். 19: சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் சுப்பையா, ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம், இளைஞர் மன்ற செயலாளர் அந்தோணி, மாணவர் மன்ற செயலாளர் எழிலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.