சிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர், தலைவர்கள் மரியாதை

புதுச்சேரி, பிப். 19: சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் சுப்பையா, ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம், இளைஞர் மன்ற செயலாளர் அந்தோணி, மாணவர் மன்ற செயலாளர் எழிலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன், திராவிடர் கழக மண்டல தலைவர் ராசு, செயலாளர் அறிவழகன், நகர தலைவர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன், பகுத்தறிவாளர்கள் கழகம் குப்புசாமி, சிங்காரவேலர் சமூகசேவை இயக்கம் குமார், புதுச்சேரி மீனவ மக்கள் கழகத்தின் கடல் கார்த்திகேயன், புகழேந்தி ஏகாம்பரம் மற்றும் பல்வேறு மீனவ அமைப்பினர், சமுதாயத்தினர், பஞ்சாயத்தார் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: