புதுச்சேரி, பிப். 19: புதுவையில் பிரபல ஷூ நிறுவனத்தில் ரூ.7.40 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த மேலாளரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நேரு வீதியில் தனியார் காலணி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பு அதிகாரியாக சீனுவாசலு கிருஷ்ணன் உள்ளார். அதே நிறுவனத்தில் மேலாளராக சேலம் கொல்லப்பட்டி ஏரிக்கரை அவென்யூ பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பணியாற்றினார். அவர் வேலை செய்த 2016 பிப்ரவரி முதல் 2017 ஜனவரி மாத இடையிலான காலத்தில் அந்நிறுவனத்தில் இருந்து வேறொரு கம்பெனிக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆனதாக கூறப்படுகிறது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் காசோலையாக மேலாளர் சதீஷிடம் வழங்கிய நிலையில் அதை அவர் தனது நிறுவன வங்கி கணக்கில் வரவு வைக்காமல் சொந்த கணக்கிற்கு காசோலையை மாற்றி மோசடி செய்தாராம். இதனிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ெபாறுப்பு அதிகாரிகள் கணக்கு வழக்குகளை ஆடிட்டிங் செய்தபோது பணமோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்து சதீஷிடம் கேட்டபோது அவர் பணியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.