தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி, பிப். 19: மயிலம் மாரியம்மன்  கோயில் தெருவை சேர்ந்தவர் தாமு மகன் சங்கர் (40) தொழிலாளி. குடிப்பழக்கம்  உள்ளதால் இவருக்கும், மனைவி தமிழ்ச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்ச்செல்வி கோபித்துக்கொண்டு தனது தாய்  வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட சங்கர் கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது தனது உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த  அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து  விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: