×

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, பிப். 19: உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் கிராமப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாரனோடை, மடப்பட்டு, கருவேப்பிலைப்பாளையம், கொரட்டங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளின் அருகில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அஞ்சலை(39), ஜெயராமன்(60), கிருஷ்ணன்(63), ஜெயா(34) உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை