ஆட்டோவில் கடத்திய எரிசாராயம் பறிமுதல்

விழுப்புரம்,  பிப். 19:  விழுப்புரத்தில் ஆட்டோவில் எரிசாராயம் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரைதேடி வருகின்றனர்.

விழுப்புரம்  மேற்குகாவல்நிலைய போலீசார் விராட்டிக்குப்பம் பகுதியில் திடீர்வாகன  சோதனைநடத்தினர். அப்போது, அதிவேகமாக வந்த ஒரு ஆட்டோவை  நிறுத்தி சோதனையிட்டபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 கேன்களில் 245  லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவை  ஓட்டிவந்தவர் ேதாகைப்பாடியைச் சேர்ந்த பார்த்தசாரதி (36) என்பது  தெரியவந்தது. மேலும், விசாரணையில் விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த  தீபன் என்பவர் தும்பூர்பகுதியில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த  சாராயத்தை, ஆட்டோவில் ஏற்றி முகையூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு  அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பார்த்தசாரதியை கைது செய்து  அவரிடமிருந்து ஆட்டோ, எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன்மொத்த மதிப்பு  ரூ.3 லட்சம் ஆகும். மேலும் இரண்டுபேரை தேடிவருகின்றனர்.

Related Stories: