×

பண்ருட்டி காதலியை ஏமாற்றி மோசடி புதுச்சேரி வாலிபரை பிடிக்க சென்னையில் தனிப்படை முகாம்

புதுச்சேரி, பிப். 19:  பண்ருட்டி காதலியை ஏமாற்றி மோசடி செய்த புதுச்சேரி வாலிபரை பிடிக்க தனிப்படை சென்னையில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (28). தனியார் கம்பெனி ஊழியரான இவர் 4 வருடங்களாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, லாஸ்பேட்டையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அப்பெண்ணை தங்க வைத்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது.இதையடுத்து சமீபத்தில் தன்னை திருமணம் செய்யுமாறு அவரிடம் காதலி கேட்டபோது, பாலாஜி மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் பாலாஜி மீது வழக்குபதிவு செய்தனர்.பின்னர் அவரது செல்போன் நம்பர் மூலம் இருப்பிடத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் தனிப்படை இறங்கியது. இதில் சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் எஸ்ஐ ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் அங்கு முகாமிட்டு பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் கைதாவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : camp ,Chennai ,Puducherry ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு