×

கரும்புகள் சரிந்ததால் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட மாட்டு வண்டி

நெல்லிக்குப்பம், பிப். 19: நெல்லிக்குப்பம் அருகே வெள்ளப்பாக்கம் பகுதியில் இருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர்- பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வண்டியின் முன் பக்கத்தில் இருந்து கரும்பு கட்டுகள் கீழே சரிந்தது. இதில் மாட்டு வண்டியை ஓட்டிவந்தவர் மீதும், சாலையிலும் கரும்பு கட்டுகள் சரிந்தது. இதனால் அஞ்சிய இரண்டு மாடுகளும் மிரண்டு கீழே விழுந்து எழுந்தது. இதனை கண்ட மாட்டு வண்டி ஓட்டுனர் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சாலையில் கரும்பு கட்டுகள் சரிந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து போக்குவரத்தை சரி செய்து மாட்டு வண்டியை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைத்தனர். இச் சம்பவத்தினால் கடலூர்- பண்ருட்டி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்