மதுரை, பிப். 19: மதுரை காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மகாலட்சுமி (41). இவர் வீட்டில் சமையல் செய்தபோது, சேலையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய மகாலட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.