×

கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்

மதுரை, பிப். 19: கேஸ் விலை உயர்வை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், மதுரையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் எஸ்சி., எஸ்டி., ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் பிப்.18ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முனிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, ராஜாஹசன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கேஸ் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதன்மேல் விறகுகளை அடுக்கி வைத்து பெண்கள் கும்மியடித்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், காமராஜ், முருகன், துரை அரசன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாண்டுரெங்கன், சுந்தரமகாலிங்கம், மகேஸ்வரன், பொதுச்செயலாளர்கள் பால்ராஜ், ரவி, வாசுதேவன், மூர்த்திலிங்கம், பச்சை மணி, ரவீந்திரன், மகளிரணி ஷா நவாஸ் பேகம், பஞ்சவர்ணம், நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,gas price hike ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...