×

சாய் விருக்ஷா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

வாழப்பாடி. பிப்.19: வாழப்பாடியில் சாய் விருக்ஷா அறக்கட்டளை சார்பில், அன்னதானம் நடந்தது.வாழப்பாடியில் சாய் விருக்ஷா அறக்கட்டளை சார்பில், ஷீரடி சாய்பாபா உருவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கி வருகின்றனர். வாழப்பாடி காவல் நிலையம் அருகே மாரியம்மன் திடல் வளாகத்தில், வழிபாடு நிகழ்ச்சி மாதந்தோறும் 2வது வியாழக்கிழமையன்று தொடர்சியாக நடைபெறுகிறது. சாய் விருக்ஷா அறக்கட்டளையின் தலைவர் கலைஞர் புகழ் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் எத்திராஜன், செல்வம், சிவக்குமார், மெடிக்கல் வெற்றிச்செல்வன், சங்கர் லால், நாசர், செல்லதுரை, அக்ரி தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Ausai Virksha Foundation ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி