×

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

தம்மம்பட்டி, பிப்.19: தம்மம்பட்டி துறையூர் சாலை தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர்சின்னத்தம்பி(37). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம், அப்பகுதியில்வீட்டில் தனியாக இருந்த, மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம்செய்ய முயன்றார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து, சின்னத்தம்பியிடம் இருந்து மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டனர். பின்னர் சின்னத்தம்பியை கட்டி வைத்து, தம்மம்பட்டி போலீசுக்கு தகவல்கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கட்டை அவிழ்த்துவிட்டு விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தார். இதனால், கிராம மக்கள்அதிர்ச்சிக்குள்ளாகினர். பிடித்து கொடுத்தவரை தப்ப விட்டதாக கூறி இரவுநேரத்தில் துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பலாத்காரம் செய்ய முயன்ற சின்னத்தம்பி மீது உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், மறியலை கைவிட்டு அனைவரும்கலைந்து சென்றனர். இந்நிலையில், சின்னத்தம்பியை நேற்றுபோலீசார் கைது செய்தன்ர. பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்