×

சேலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

காடையாம்பட்டி, பிப்.19: காடையாம்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கி மாத்திரை கொடுத்து கலைத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். காடையாம்பட்டி அருகே நாச்சனம்பட்டி காலனியை சேர்ந்த சிவாஜி மகன் மணிவண்ணன்(22). இவர், தீவட்டிப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் மல்லூர் பகுதியைச் சேர்ந்த உறவினரின் 16 வயது மகள் மணிவண்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, ஆசை வார்த்தை கூறி, மணிவண்ணன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க, மணிவண்ணன் சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து தலைமறைவான மணிவண்ணனை, போலீசார் கடந்த ஓராண்டாக தேடி வந்தனர். மேலும், இந்த வழக்கு தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இதன் மீது விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தீவட்டிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த, மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். பின்னர், சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

Tags : Salem ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை