×

கிருஷ்ணகிரி துர்க்கையம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரியில் முத்துவிநாயகர், துர்க்கையம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி நகர 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் காமாட்சியம்மன் தேவாதி அம்மன் 11ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயாகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காட்டுவீர ஆஞ்சநேயருக்கு 1008 வடமாலை சாத்துதல் மற்றும் அபிஷேக பூஜையும், வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், பழையபேட்டை காமாட்சியம்மன் கோயிலில் வழிபாடும் நடந்தது. காலை 9 மணிக்கு முத்துவிநாயகர், துர்க்கையம்மன் கோயிலில் காமாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்துல், யாக பூஜை வழிபாடும் நடந்தது. பின்னர் பகல் 1 மணிக்கு மா விளக்கு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Krishnagiri Durgalayamman Temple ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்