ஓசூர், பிப்.19: ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்)சார்பில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் சிஏஏ மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு என்ஆர்சி ஆகிய வற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் இம்ரான் கான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அசார் இர்ஃபான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் இம்தியாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அமினுல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் அமீன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ஷாஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.