×

மகாராஷ்டிராவில் விபத்து திருச்சி டிரைவர் சாவு

திருச்சி, பிப். 19: திருச்சி திருவானைக்காவல் சக்தி நகரை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன்(58), லாரி டிரைவர். இவரது மகள் ரமணி(22). டெல்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். கடந்த டிசம்பர் 15ம் தேதி மோகன கிருஷ்ணன், லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். அப்போது விபத்தில் சிக்கி அங்கேயே சிகிச்சை பெற்றார். டிச.21ம் தேதி சிகிச்சை முடிந்து திருச்சிக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த ஜன.15ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்தார். அவரை உடனே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து மகள் ரமணி அளித்த புகாரின் பேரில், ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,Trichy ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...