திருச்சி, பிப்.19: திருச்சி காவேரி மகளிர் கல்லூரி யுஜிசி பரமாஷ் நிதி நல்கையின் கீழ் தேசிய தர நிர்ணயக்குழு மதிப்பீட்டிற்கான திட்டமிடல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.பெங்களூரு தேசிய தர நிர்ணயக்குழுவின் துணை ஆலோசகர் தேவேந்தர் கவுடே, கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள் பேராசிரியர் கீதா, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் னிவாசராகவன், ஐசிஇடி இயக்குனர் ராம்கணேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். நிர்வாகக்குழுத் தலைவர் நீலகண்டன், செயலர் விஜயராகவன், பொருளாளர் கோபால் முன்னிலை வகித்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.