குடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் சாவு

முசிறி, பிப்.19: முசிறி அருகே உள்ள சின்ன வேளாகாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி(40). வடிவேல், குடும்ப செலவிற்கு சரிவர பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 1ம் தேதி மன உளைச்சலுடன் காணப்பட்ட தேவி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத் தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து உடலில் பற்றிய தீயை அணைத்த அக்கம்பக்கத்தினர் தேவியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேவி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்துபோன தேவிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Related Stories: