காஸ் விலை உயர்வை கண்டித்து

திருச்சி, பிப். 19: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன், மாநில நிர்வாகி ரெக்ஸ் மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர்.மணப்பாறை: மணப்பாறையில் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி தெற்கு மாவ ட்ட காங்கிரஸ் சார்பில் மணப்பாறை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், கணபதி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வா, வட்டார தலைவர்கள் கண்ணன், குப்பமுத்து, வக்கீல் ஜான்போஸ்கோ, ஜஸ்டின், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மார்ட்டின் ஜெகதீசன், மகளிர் அணி தலைவி சரோஜா, மேரி ராஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: