×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு உடல்நல குறைவால் இறந்த பூண்டி கலையரசன் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

திருவாரூர், பிப்.19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த பூண்டி கலையரசன் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மறைந்த பூண்டி கலைச்செல்வம் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் ஆகியோரது சகோதரரும், கொரடாச்சேரி பேரூராட்சி கழக செயலாளராகவும் இருந்து வந்தவர் பூண்டி கலையரசன் (53). இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு நேற்று காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தி.க.பொது செயலாளர் ஜெயக்குமார் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கலையரசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள இடுகாடு ஒன்றில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதில் எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, மதிவாணன், ஆடலரசன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் தேவா, பாலச்சந்தர், கலியபெருமாள், குமரேசன், நகர செயலாளர் பிரகாஷ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் வீரா தேசபந்து, மாவட்ட பிரதிநிதிகள் அரிச்சபுரம் செல்வம், சுப்பிரமணியன் மற்றும் மன்னை தனசேகரன் உட்பட ஆயிரக்கணக்கான திமுகவினர், அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags : parties ,Bundi Kalairasanan ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...