×

கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான விட்டுக்கட்டி-வரம்பியம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி, பிப்.19:விட்டுக்கட்டி-வரம்பியம் சாலையை விரைவில்
சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில் விட்டுக்கட்டி - வரம்பியம்- கடியாச்சேரி வரை 3.5 கிலோமீட்டர் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். குண்டும் குழியுமான சாலையாக மாறி பல ஆண்டுகள் இருக்கும். இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக மினி பேருந்துகள் இயங்கி வந்தது, சாலை மோசமானதால் பேருந்துகள் இந்த வழியாக சென்று வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு முதல் கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் இந்த விட்டுக்கட்டி -வரம்பியம் -கடியாச்சேரி சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்வதற்கான சர்வே எடுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் சாந்திகண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : barrier-boundary road ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...