×

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரமாக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.19: ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் நேற்று மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மின்வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தினை மின் வாரியமே நேரடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியூ தொழிற்சங்கம் சார்புடைய மின் ஊழியர் மத்திய அமைப்பினர் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துணை தலைவர்கள் சுப்ரமணியன், ராமசாமி மற்றும் சிஐடியூ ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் அனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Demonstration ,contract employees ,Central Employees Union Organization ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்