திருவையாறு, பிப்.19: திதிருவையாறு வடக்குவீதியை சேர்ந்த ஷரிபாபேகம் மகள் ஷகிலாபானு(27). இவரை நெய்வேலி ராஜாஜி சாலையை சேர்ந்த உறவினரான ஜாபர்உசேன் என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொடுத்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை குடும்ப பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் பொங்கலுக்கு முன்பு திருவையாறு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்த ஷகிலாபானுவை காணவில்லை. உடனே பெற்றோர் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பிறகு 15-ம் தேதி ஷகிலாபானு வந்துவிட்டார். பிறகு தாயாருடன் வீட்டிலிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு ரூம் கதவை சாத்திக்கொண்டு மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இறந்துபோன ஷகிலாபானுவுக்கு திருமணம் ஆகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.