பட்டுக்கோட்டை, பிப். 19: பட்டுக்கோட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து நாதஸ்வரம், மேளம், கரகாட்டம், தப்பாட்டம் என கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கிய பேரணியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நாடிமுத்துநகர்,பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு, பெரியதெரு, தலைமை தபால் நிலைய சாலை வழியாக காசாங்குளம் அண்ணா அரங்கம் அருகில் பேரணி நிறைவடைந்தது.