×

சென்னையில் காவல்துறை தடியடி கண்டித்து மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, பிப்.19: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறந்தாங்கியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய நிர்வாகி கோமதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயா, வழக்கறிஞர் பவதாரணி, ஞானம்பாள், கவிதா, மேகலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சென்னை வண்ணாரப் பேட்டையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பர்வீன்ரமிஜா,நிஷா,சுலேகாபீவி,ரிகானா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


Tags : protest ,Madhar National Federation ,Chennai ,
× RELATED அர்ஜெண்டினாவில்...