×

7 பேர் படுகாயம் அறந்தாங்கியில் தடை செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல்

அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி நகராட்சி ஆணையர்(பொ) மற்றும் சுகாதார அலுவலர் முத்துகணேஷ் உத்தரவின்பேரில், சுகாதாரப்பிரிவினர் அறந்தாங்கி நகரில் வாரச்சந்தை, பேராவூரணி சாலை, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள 550 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 இந்த சோதனையில் கடைகளில் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்ததால் கடைக்காரர்களிடம் ரூ.29 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு