×

பென்சனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் சொத்து தகராறில் தாயை வெட்டிய மகன் கைது

ஜெயங்கொண்டம், பிப்.19: ஜெயங்கொண்டம் அருகே பாப்பாக்குடி கிராமம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி குஞ்சாயாள்(50). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இவரது மூத்த மகன் பாலகுமார் (34).இவருக்கு திருமணமாகி விட்டது.
அதே ஊரில் வாடகை வீட்டில் வசிக்கிறார். இளைய மகனுடன் குஞ்சாயாள் வசித்து வருகிறார். மூத்த மகனான பாலகுமார் அடிக்கடி தனது தாய் குஞ்சாயாளிடம் குடியிருக்க எனக்கு வீடு வேண்டும் என்று கேட்டு வந்தார். நேற்று பாலகுமார் தனது தாய் வீட்டிற்கு வந்து வீட்டை கேட்டு தகராறு செய்தபோது தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து,. குஞ்சாயாளை வெட்டி விட்டும் கொலை மிரட்டல் விடுத்தும் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த குஞ்சாயாளை அக்கம் பக்கத்தினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குஞ்சாயாள் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...