×

மின்தடையால் மக்கள் அவதி விருத்தாச்சலம்-மதனத்தூர் சாலையில் சாலையோர மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி மும்முரம்

தா.பழூர், பிப்.19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் விருத்தாச்சலம் மதனத்தூர் சாலையில் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. சாலையோரம் உள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பொருட்டு தண்ணீர் விடும் பணி நடைபெறுகிறது. அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன், உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சாலை ஆய்வாளர் கவிதா சாலை பணியாளர்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றை கூண்டுகள் அமைத்து பராமரித்து வந்தனர் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மழை இல்லாததால் சாலையோரம் உள்ள மரங்களை பாதுகாக்கும் பொருட்டு டேங்கர் மூலம் தண்ணீர் விடும் பணி நடைபெற்று வருகிறது.இதில் நாவல், அரசமரம், ஆலமரம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சாலை பணியாளர்களை கொண்டு இவற்றைப் பராமரித்து தற்பொழுது தண்ணீர் விடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : road ,Janata Avadi Viruthachalam-Madanathoor ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி