×

உழவர் கடன் அட்டை பெற்று விவசாயிகள் பயனடையலாம்

கொள்ளிடம்,பிப்.19: உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் விவசாய கடன் அட்டை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்து பேசுகையில். பிரதமரின் விவசாய கவுரவ நிதித்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெற்று பயனடையலாம். இதன் மூலம் 15 நாட்களுக்கு பின் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெறலாம்.

உழவர் கடன் அட்டையை ஏற்கனவே பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் வங்கி கிளையை அணுகி கடன் தொகை வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம் . செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் தொகை வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும் புதிய கடன் வரம்புக்கு அனுமதியும் பெறலாம். உழவர் கடன்அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுகலாம் என்றார்.

Tags : tiller ,
× RELATED குன்னூர் உழவர் சந்தை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஆபத்து