×

எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

கரூர், பிப். 19: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு நுகர்வோர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலக வளாக கூட்டரங்கில் நாளை(20ம் தேதி) மாலை 4 மணிக்கு இந்த குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gas Consumer Dispute ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா