×

மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 19: மத்திய அரசின் விலைவாசி உயர்வினைக் கண்டித்து காங் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வினை எதிர்த்தும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். திருச்சி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். பேங்க் சுப்பிரமணியன், ஸ்டீபன்பாபு, சவுந்தரராஜன், சதீஸ்குமார், கனிகண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Kong ,government price hike Parties ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...