தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி  திரேஸ்புரத்தை சேர்ந்தவர் அந்தோனி சாமி (44). மீனவர். இவரது மனைவி  மலர்விழி (30). தம்பதி இடையே நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தகராறு உருவானது. இதில் ஆத்திரமடைந்த அந்தோனிசாமி, மலர்விழியை கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த மலர்விழி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வடபாகம்  போலீசார் அந்தோனிசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: