அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கோவில்பட்டி, பிப். 19: கோவில்பட்டி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் கடந்த ஜன. 16ம் தேதி அதிமுக பிரமுகர் பாலமுருகன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த  தங்கப்பாண்டி (29) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன், எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் பரிந்துரை ஏற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பிறப்பித்த உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: