கோவில்பட்டி, பிப். 19: குறைந்தபட்சம் மாதம் ரூ.7,850 பென்ஷன் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோவில்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 வீதம் பென்ஷன் வழங்க வேண்டும். மேலும் அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச பேருந்து பயண அட்டை, குடும்ப நல நிதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோவில்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.