×

சென்னையில் நெரிசலான 15 இடங்களில் மேம்பாலம்

சென்னை, பிப். 19: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 15 இடங்களில் ரூ.1500 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் 238 பாலங்கள், 14 ேமம்பாலங்கள், 4 நடைமேம்பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பாலங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதை தவிர்த்து 14 மேம்பாலங்களில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ரூ.8 கோடி மதிப்பீட்டில் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் வகையில் 6 மேம்பாலம், கோயம்பேடு விருகம்பாக்கத்தை இணைக்கும் பெரிய மேம்பாலம் ஆகியவற்றை அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 9 இடங்களில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதை தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 15 இடங்களில் மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி ஐசிஎப் சந்திப்பு, ஜிபி சாலை சந்திப்பு, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கெல்லீஸ் சாலை, அயனாவரம் சாலை, ஓட்டேரி சாலை, பேசின் பாலம் சாலை, என்எம் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு, ஆர்.ஏ.புரம் சாலை, நந்தனம் சாலை, கீரீன்வேஸ் சாலை, எஸ்.ஆர்.பி டூல்ஸ், குருநானக் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.1500 கோடி மதிப்பிலான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தவுடன் சாத்திய கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இந்த பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : places ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...