×

காஞ்சிபுரம் அருகே தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டையில் உள்ள பக்தவச்சலம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் பொன்னையா பணி நியமன ஆணை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் பக்தவச்சலம் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பு முகாம் நேற்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடந்தது. இதில் ஆட்களை தேர்வு செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 8வது தேர்ச்சி, 10வது, 12வது, பட்டம், பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், பார்மஸி, பாராமெடிக்கல், படித்த வேலை தேடுபவர்கள் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர். முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் பொன்னையா, வழங்கினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு துறை துணை இயக்குநர் (பொ) ரேவதி, மகளிர் திட்ட உதவி இயக்குநர் சாவித்திரி உள்பட பலர் இருந்தனர்.

Tags : employment camp ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...