×

தக்கலை அருகே நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

தக்கலை, பிப். 19:தக்கலை  அருகே பத்மனாபபுரம் ராமசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த  குமார்(49). இவர் தற்போது மதுரை நீதிமன்றத்தில் குற்றவியல் தலைமை நீதிபதியாக இருந்து  வருகிறார்.  குடும்பத்துடன் மதுரையில் தங்கி உள்ளதால் ஊரில் உள்ள  வீடு பூட்டி கிடைக்கிறது.  விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது  வழக்கம். இரவது வீட்டின் பின்புற பகுதியில் சந்தன மரம் ஒன்று  செழித்து வளர்ந்து இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு உள்ளே புகுந்த மர்ம  நபர்கள் அந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து  நீதிபதி ஹேமந்த குமார் தக்கலை  போலீசில் புகார் அளித்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : judge ,house ,Thakalai ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...